ஒரு நாள் ஆயுள் கொண்ட
பூக்களை
குற்றுயிராய் பறித்து
இறைவனுக்கு படைத்து
நீண்ட ஆயுள்
வேண்டினான் மனிதன் !!
உன்னை காதலித்தது கடமை
விலகி போனது கண்ணியம்
உன் நினைவோடு வாழ்வது கட்டுப்பாடு
உன் காதல் உரிமை
சட்டத்தில்
நான் நிராகரிக்க பட்டால்
என்னை நாடு கடத்திவிடு
உன் நினைவுகள் இல்லாத
தேசத்திற்கு !
மனிதன் பிறந்த நாள் கொண்டாட
தன் இறந்த நாளை
கண்டது
மெழுகுவர்த்தி !!
கையோடு கை கோர்த்து
கதைத்தாளில்லை ...
கைபேசியிலும்
கதைத்தாளில்லை ..
கனவோடு
கதைக்கிறாள் ...
யாரந்த கவிதை நாயகி !!
யார் சொன்னது
சிறகின்றி பறக்க முடியாதென்று ..
காதலித்து பார் !!
No comments:
Post a Comment