எந்தூக்கம் போகுதடி
காட்டு மல்லி வாசம் வந்து
எம்மோகம் கூட்டுதடி
போட்டு வச்ச ஆசைகள
சொல்ல மனசு துடிக்குதடி
பாக்கு மர வேரப்போல
பாவி மனசு பின்னுதடி
சாக்கு போக்கு சொல்லி தினம்
சிக்கிகிட்டு தவிக்குதடி
சீக்கு கோழி போல என்ன
துவள வச்சு ரசிக்குதடி
தென்ன ஓல சலசலக்க
தேன் நிலவும் தேயுதடி
தெனம் தெனம் ஒந்நெனப்பு
தென்னங்கள்ளா ஊறுதடி
மனசு முழுக்க காதலோட
மடி சாஞ்சா போதுமடி
No comments:
Post a Comment