Tuesday, March 30, 2021

கவலையுதிர்காலம்

 வேல் முனையும் 

உன் விழியும் 

ஒன்றல்ல கண்ணே ...


ஆறாத'காயம் 

உன் 

விழி தந்த பின்னே !


குளிர்காலம் ...

கோடைக்காலம் ...

மழைக்காலம் ...

வசந்த காலம் ...

இலையுதிர்காலம் ...

என 

இயற்கைக்கு 

காலங்கள் பல படைத்தாய் 

ஏழைக்கு 

கவலையுதிர்காலம் 

என்று படைப்பாய் !!

No comments:

Post a Comment