சேதி என்னவோ !
பூஞ்சோலை தாலாட்டும் தென்றல்
வண்டுகளுக்கு சொல்லி வைத்த சேதி என்னவோ ...
அதை கேட்டு பூக்களும் நாணம் கொண்டதோ !
நீரோடை தாலாட்டும் தென்றல்
நாணலுக்கு சொல்லி வைத்த சேதி என்னவோ ...
அதை கேட்டு கெண்டை மீன்கள் உள்ளம் துள்ளுதோ!
மேகங்கள் தாலாட்டும் தென்றல்
நிலவுக்கு சொல்லி வைத்த சேதி என்னவோ ...
அதை கேட்டு விண்மீன்கள் கண் சிமிட்டுதோ!
மஞ்சத்தில் தாலாட்டும் தென்றல்
கண்களுக்கு சொல்லி வைத்த சேதி என்னவோ ...
அதை கேட்டு கன்னங்களும் தான் சிவந்ததோ!
No comments:
Post a Comment