Friday, March 5, 2021

புரிஞ்சுக்கடி

ஆவணியும் வந்ததடி 
ஆசைகள தூண்டுதடி
கனவெல்லாம்  பொங்குதடி 
மனசெல்லாம்  தங்குதடி 

தெருவெல்லாம் தேடுதடி
தெரட்டு பாலும் கரையுதடி
நெஞ்சும் வறண்டு போனதடி  
காஞ்சு போயி வாடுதடி 

அரும்பு போல மொளச்சதடி
துரும்பாத்தான் நெனச்சேனடி
உடும்பு போல காதலடி 
இரும்பாத்தான் ஆனதடி 

ஒத்தயில தவிக்குதடி 
நெலவும்தான் ஏசுதடி
மாமன் மனச புரிஞ்சுக்கடி 
மனசு வச்சு  கட்டிக்கடி 

No comments:

Post a Comment