இதய நரம்பில் நடக்கிறாய்!
ஆயுத பூஜைக்காவது
விடுமுறை எடுத்து கொள்ளுமா...
உன் கண்கள்!
நீ தெருவில் வரும் நேரம்
தானே மனசுக்குள் அடிக்குது அலாரம்
சிந்து நதி கரையில் நாகரிகம்
வளர்ந்திருக்கலாம்
என் காதல் வளர்ந்ததென்னவோ
உன் இருவிழி கரையில்தான்
திருடுவது குற்றமென்று
கற்றதில்லையோ...
என்னை திருடுகிறதே
உன் கண்கள்!!
போஸ்ட், ஸ்பீடு போஸ்ட், தந்தி, எஸ் எம் எஸ், இமெயில் என
அனைத்து வசதிகளையும் கொண்டது
அவள் கண்கள் மட்டுமே!!
எங்கள் ஆட்சி அமைந்ததும் ..
எத்தனை காலம்தான்
இதையே பிதற்றுவீர்கள் !!
ரசாயன மாற்றம்
வேதியலில் மட்டுமா ..
பார்வை பரிமாற்றத்திலும்தான்
பார்வையால் தினம்
நடத்துகிறாள் உலகப்போர்
சமூக வலைதளங்களில்
உறவினர்களை
பிளாக் செய்வதற்கு
பெயர்தான்
நாகரீகம்
மாவட்ட ஆட்சியரிடம்
விண்ணப்பித்திருக்கிறேன்
உன் பாதம் பட்ட இடங்களை
பட்டா போட்டுத் தர!!
விண்ணை தாண்டி வருவாள்
என்றிருந்தேன்....
பாவி மக...
வீட்டு மண்ணையே
தாண்டி வரலியே!
சாதி என்றால்
சாதித்துக் காட்டு
என்பது தானே பொருள்...
எமன் என்ற நீதிபதி
தீர்ப்பு எழுத
லஞ்சம் வாங்குவதில்லை .
எமதர்மன் ஆத்திகன்
நல்ல நாள் பார்த்து
அவன் வருவதில்லை!!
No comments:
Post a Comment