Tuesday, March 30, 2021

பெண் நீதி என்றும் நெருப்படி !!

 


எல்லையோரம் அரசமரம் 

ஏங்கித்தான் காத்திருக்கேன் 

மாமனும் வருவானோ 

மனச கொஞ்சம் தருவானோ  !!


ஒத்த மரத்தடியில் 

ஒத்தயில காத்திருக்கேன் 

சொக்கனும்தான் வருவானோ 

சொக்கிப்போய் நிப்பேனோ !!


நிழலிலே நின்னாலும் 

தழலாய் கொதிச்சிருக்கேன் 

நீராய் அணைப்பானோ 

விரகம் தீர்ப்பானோ !!


இரு விழி மயங்கிடவே 

வரும் வழி பாத்திருக்கேன் 

நாயகனும் வருவானோ 

சோகமதை தீர்ப்பானோ !!


மாலையும் சாயுதடி 

மல்லிகையும் வாடுதடி 

என் சேதி கேட்க யாருமில்ல 

பெண் நீதி என்றும் நெருப்படி !!

No comments:

Post a Comment