விழித்திருந்து என்னை
தூங்கச் செய்தாய்
பசித்திருந்து என்னை
உண்ணச் செய்தாய்
வலியோடிருந்து என்னை
சிரிக்க செய்தாய்
கூண்டிலிருந்து என்னை
உலகம் காண செய்தாய்
உன்னால் உலகை அறிந்தேன்
எனைக்கண்டு உலகை மறந்தாய்
உள்ளங்கையில் உலகம் இன்று
உனையினி காண்பது என்று!!
No comments:
Post a Comment