நீ நடந்து வந்தா
நிலவும் அனலாகும்
வெயிலும் பனியாகும்
செம்பவழ உதட்டுல
சிரிப்பும் செதறயில
காயும் கனியாகும்
கல்கண்டும் கரையும்
பால் கலந்த கருப்பட்டியா
கொஞ்சி நீயும் பேசயில
மனசும் கெறங்கும்
உசுரும் உருகும்
கையோட கை சேத்து
ஒன்னோட நடந்தா
காத்தும் கை கட்டும்
ஆயுசும் அடங்கும்
No comments:
Post a Comment