தவமிருந்து பெத்தாயோ
வைரம்தான் பொறக்குதுன்னு
வரம் கேட்டு பெத்தாயோ
ஆலமரமென வளர்த்தாயோ
அரளிவிதையாய் போனேனோ
கனவென்ன கண்டாயோ
நனவாக்க மறந்தேனோ
இதயத்தில் சுமந்தவளை
கவிதையில் தாலாட்டி ...
தாலாட்டி வளத்த ஒனக்கு
ஒத்த வரி எழுதலியே
கவிதையென்று கிறுக்குவதெல்லாம்
அலங்கார பொய்களம்மா
நித்திய ஜோதி உன்னை
எழுத்தில் எப்படி வடிப்பேனம்மா?
No comments:
Post a Comment