குறுநகையும் சேர்த்து வைத்து
வளையோசை கலகலக்க
கட்டுகிறாய்..
கட்டுகிறாய்..
என் மனதையும் சேர்த்து ஏன்
கட்டுகிறாய்!!
கருங்கூந்தல் முன்னெடுத்து
வாசனை நீர் தோய்த்து
வளையோசை கலகலக்க
வளையோசை கலகலக்க
பின்னுகிறாய்...
என் மனதையும் சேர்த்து ஏன்
பின்னுகிறாய்!!
கருகருவென மையெடுத்து
குறுகுறுவென விழி திறந்து
வளையோசை கலகலக்க
தீட்டுகிறாய்
என் மனதையும் சேர்த்து ஏன்
தீட்டுகிறாய்!!
சந்தனம் அரைத்தெடுத்து
ஜவ்வாதும் கலந்து வைத்து
வளையோசை கலகலக்க
பூசுகிறாய்
என் மனதையும் சேர்த்து ஏன்
பூசுகிறாய் !!
கத்திரிப்பூ சேலையெடுத்து
இடுப்போரம் கொசுவம் வைத்து
வளையோசை கலகலக்க
சூடுகிறாய்
என் மனதையும் சேர்த்து ஏன்
சூடுகிறாய் !!
No comments:
Post a Comment