நாளெல்லாம் உன் நினைவே
வழிமேல் விழியாக
வேதனையுடன் காத்திருக்கேன்
ஏன் வரவில்லை
என் மேல் கோபமா?
உடம்பு சரியில்லையா
ஊரிலேயே இல்லையா?
காத்திருப்பதில் ஆத்திரமில்லை
கடைசியிலேனும் வந்தால் சரி
உன்னை அடைய எத்தனை காத்திருப்பு
என்னென்ன கஷ்டங்கள்
இன்னொருத்தியை
எண்ணிக் கூடப் பாரேன்-நேற்று
மாத்திரம்தானே லீவு-
பாத்திரம் தேய்க்கணும்
இனியும் தாமதியாது வந்துவிடு
முனியம்மா…
No comments:
Post a Comment