தும்பிக்கு
பூக்கள் மீது
மோகம்...
பூக்கள் மீது
மோகம்...
எனக்கோ
தும்பியே
மோகம்!
══════════════
உன்
மெல்லிய
பார்வையோடு
போட்டி
போடுகிறதே...
தும்பியின்
மெல்லிய
சிறகுகள்!
══════════════
குளத்தோரம்
வட்டமிட்டு
திரும்பிவிட்டது
தும்பி...
என்
நினைவுகளின்
ஓரத்தில்
இன்னும்
நீ!
══════════════
அதிராமல்
மலர்மீது
அமர்ந்துவிட்டதே
தும்பி...
உன்
பார்வை
அமர்ந்ததற்கே
பிரளயமாய்
அதிர்கிறது
இதயம்!
══════════════
தோட்டத்திற்கு
பூக்கள்
அழகா?
பூக்களில்
அமரும்
தும்பிகளால்
அழகா?
அல்லது...
நீ
உலவுவதால்
தோட்டமே
அழகா?
══════════════
பூக்களை
ஏன்
ஏமாற்றுகிறாய்?
தங்களைப்
பார்க்கத்தான்
தும்பிகள்
வருகின்றன
என்று...
பூக்கள்
இன்னும்
நம்பிக்கொண்டிருக்கின்றன!
No comments:
Post a Comment