Sunday, July 26, 2026

வேறே வசந்தமும் ஏனோ?

ஆண் :
வசந்த காலத்திற்கு 
வீசிடும் தென்றலும் 
வாசனை பூக்களும் ஏனோ?
என் விழி முன்னே 
நீயுமிருந்தால் 
வேறே வசந்தமும் ஏனோ?

பெண் :
கோவில் பூஜைக்கு
கனலும் கற்பூரமும்
திரியும் தீபமும் ஏனோ?
உனதன்பு தீபம்
என்றும் இருந்தால் 
வேறே பூஜையும் ஏனோ?

சரணம் 1
ஆண் :
தென்றலும் உன்னை 
தீண்டிய பின்பு 
பொறாமை தீயில் 
உருகுது  !
பூந்தோட்டமும் உன்னை 
கண்டதனாலே 
பூக்களின் வாசனை 
மறக்குது !

ஆண் :
வசந்த காலத்திற்கு 
வானில் மதியும் 
குயில்களின் கீதமும் ஏனோ?
என் விழி முன்னே 
நீயுமிருந்தால் 
வேறே வசந்தமும் ஏனோ?

பெண் :
கோவில் பூஜைக்கு
மலர் சரங்களும் 
அர்ச்சனை பூக்களும் ஏனோ?
உன் அன்பு மலர்கள்
என்றும் இருந்தால் 
வேறே மலர்களும் ஏனோ?

சரணம் 2
ஆண் :
காவிரிக்கரையில் 
உன் நடை கண்டு 
அன்னமும் கொஞ்சம் 
நாணுது !
மயில்களும் உன்னை 
கண்டு மயங்க 
கூந்தலும் மேகமாய்  
தோணுது !  

ஆண் :
வசந்த காலத்திற்கு 
மலையின் அருவியும் 
மயிலின் நடனமும் ஏனோ?
என் விழி முன்னே 
நீயுமிருந்தால் 
வேறே வசந்தமும் ஏனோ?

பெண் :
கோவில் பூஜைக்கு
பஜனை சங்கீதமும் 
மந்திர ஒலிகளும் ஏனோ?
உன் அன்பு மொழிகள் 
என்றும் இருந்தால் 
வேறே மந்திரம்  ஏனோ?

சரணம் 3
ஆண் :
வைகறை சூரியன் 
உன்னெழில் கண்டு 
பொன்னொளி வீசி 
ஆடுதே !
மாலை கதிரவன் 
மறைவதனாலே  
பிரிய மனமின்றி 
வாடுதே !

ஆண் :
வசந்த காலத்திற்கு 
அலையும் கடலும் 
மாலையில் சுடரும் ஏனோ?
என் விழி முன்னே 
நீயுமிருந்தால் 
வேறே ஒளியும் ஏனோ?

பெண் :
கோவில் பூஜைக்கு
நெற்றியில் நீறும் 
குளிர் சந்தனமும் ஏனோ?
உன் அன்பு மலர்கள்
என்றும் இருந்தால் 
வேறே திலகமும் ஏனோ?

ஆண் :
நான்கு வேதங்களும் 
பதினெண் புராணமும் 
வானில் 
சொர்க்கம்  தேடுமே !

பெண் :
கைகள் கோர்த்து
உன்னுடன் நடந்தால்
பூமியே 
சொர்க்கம் ஆகுமே !

ஆண் :
வசந்த காலத்திற்கு 
தேனீயும் தும்பியும் 
பட்டாம் பூச்சியும் ஏனோ?
என் விழி முன்னே 
நீயுமிருந்தால் 
வேறே இனிமையும் ஏனோ?

பெண் :
கோவில் பூஜைக்கு
அறுசுவை கனிகளும் 
அபிஷேகங்களும் ஏனோ?
உன் அன்பு மலர்கள்
என்றும் இருந்தால் 
வேறே கோவிலும் ஏனோ?

இருவரும் :
மலரும் மணமும் போல் 
ஒன்றாய் இருந்தால் 
உலகே 
வசந்தம் ஆகுமே  !
இதயத்தில் காதல் 
என்றும் இருந்தால் 
இல்லமே ஆலயம் ஆகுமே !

================

செந்நிற இதழ்கள் 
தேனின் இனிமை போல் 
சிந்தையில் தினமும் ஊறவே !
விழிகளின் மொழிகள் 
இதயக்கவிதை என 
உயிரின் இசையாய் மாறவே !

மான் விழி மங்கை 
என் அருகில் இருந்தால் 
வேறே சொர்க்கமும் ஏனோ ?

No comments:

Post a Comment