Saturday, July 11, 2026

வண்ணத்து பூச்சிகளிடம் மோதாதே

வண்ணத்து பூச்சிகளை 
ஏன் 
படைத்தான்  
என்கிறாய் ?

நிறங்களை 
எப்படி 
அழகாக்குவது ?
====================
நிறங்களை 
உருவாக்கும் 
போட்டியா ?

வண்ணத்து பூச்சிகளிடம் 
மோதாதே ...

தோற்றுவிடுவாய் !
====================
நிறங்கள் 
என்ற தலைப்பில் 
கவிதை  எழுத 
பூங்காவில் அமர்ந்து 
சிந்தித்தேன் ...

ஆரம்பித்து 
வைத்தது 
இயற்கை  ..

எதிரே 
பூச்செடியில் 
வண்ணத்துப்பூச்சி !
====================
பூக்கள் 
உன் 
கூந்தலுக்காக 
மட்டுமே 
பூக்கின்றன 
என்று எண்ணியிருந்தேன் ..

வண்ணத்து பூச்சிகளை 
பார்க்கும்  
வரை !
====================
சோர்ந்து
போனாள்...

வண்ணத்துப்பூச்சியை
துரத்திய
சிறுமி!

சோர்வதே
இல்லை...

உன்னை
துரத்தும்
என்
நினைவுகள்!
====================
வண்ணத்து 
பூச்சிகளை 
படைத்து 
தன்னை 
அழகாக்கிக் கொண்டது 
இயற்கை !

இயற்கை 
பிறழ்வதே 
இல்லை !


No comments:

Post a Comment