வண்ணத்து பூச்சிகளை
ஏன்
படைத்தான்
என்கிறாய் ?
ஏன்
படைத்தான்
என்கிறாய் ?
நிறங்களை
எப்படி
அழகாக்குவது ?
====================
நிறங்களை
உருவாக்கும்
போட்டியா ?
வண்ணத்து பூச்சிகளிடம்
மோதாதே ...
தோற்றுவிடுவாய் !
====================
நிறங்கள்
என்ற தலைப்பில்
கவிதை எழுத
பூங்காவில் அமர்ந்து
சிந்தித்தேன் ...
ஆரம்பித்து
வைத்தது
இயற்கை ..
எதிரே
பூச்செடியில்
வண்ணத்துப்பூச்சி !
====================
பூக்கள்
உன்
கூந்தலுக்காக
மட்டுமே
பூக்கின்றன
என்று எண்ணியிருந்தேன் ..
வண்ணத்து பூச்சிகளை
பார்க்கும்
வரை !
====================
சோர்ந்து
போனாள்...
வண்ணத்துப்பூச்சியை
துரத்திய
சிறுமி!
சோர்வதே
இல்லை...
உன்னை
துரத்தும்
என்
நினைவுகள்!
====================
வண்ணத்து
பூச்சிகளை
படைத்து
தன்னை
அழகாக்கிக் கொண்டது
இயற்கை !
இயற்கை
பிறழ்வதே
இல்லை !
No comments:
Post a Comment