Sunday, July 5, 2026

பிரகாரத்தில் பூத்த காதல்

கோவிலுக்குள் 
என்னை 
ஈர்த்தது ...

வாசலில் 
கண்ட 
உனது 
காலணி !!
கோபுர
தரிசனம்
கோடி
புண்ணியம் என்பார்கள்...

உன்
ஒரு
தரிசனம்
போதும்
இந்த
இதயத்திற்கு
பிறவிப்
புண்ணியம்!
கோவில்
பிரகாரத்தை
மட்டுமா
சுற்றுகிறாய்...

என்
இதயத்தையும்
அல்லவா
பிரதட்சிணம்
செய்கிறாய்!
மணியோசை
கேட்டு
நீ
கண்களை
மூடியபோது...

விழித்துக்கொண்ட
என்
காதல்
இன்னும்
உறங்கவே
மறுக்கிறது!
திறக்காத
திருவாசலையும்
கும்பிட்டு
செல்கிறாய்...

எப்போதும்
திறந்தே
காத்திருக்கிறது
என்
இதயவாசல் ...

நீ
குடிகொள்ள!
ஆலய
தீபத்திற்கு
எண்ணெய்
ஊற்றுகிறாயா...

இல்லை
என்
காதல்
நெருப்பில்
நெய்யை
வார்க்கிறாயா?
நீ 
துளசியை 
சுற்றியபோது ..

மகாலட்சுமியே 
தன்னை 
சுற்றிவந்ததாக 
துளசி 
கர்வப்பட்டதை 
நீ 
அறிவாயா !?
அர்ச்சனை 
நேரத்தில் 
ஏதேதோ 
மந்திரங்களை 
முணுமுணுக்கிறாய் ...

உன் 
பெயரைத்தவிர 
வேறு 
மந்திரமே 
அறியாதவன் 
அல்லவா 
நான்  !
சந்தனம்
நெற்றியில்
பூசினாய்...

என்
நினைவுகள் 
நறுமணத்தை 
பூசிக்கொண்டன!!
நீ 
வாங்கிய 
சர்க்கரை 
பொங்கலில் 
சிறிது 
எனக்கும் 
தந்தபோதுதான் 
புரிந்தது ...

பிரசாதம் 
என்றால் 
என்னவென்று !
தேவியோடு 
இருப்பவன் 
கோபித்துக்கொள்ளவா 
போகிறான் ?

உனக்காகத்தான் 
நான் 
கோவிலுக்கு 
வருகிறேன் 
என்று 
சொன்னால் !
கொடிமரத்தை
கடந்து
சென்றாய்...

என்றோ 
ஏறிவிட்டது ..

என்
இதயத்தில்
காதல்
கொடி!!
எதற்காக 
தேரை 
இழுக்கிறார்கள் ...

தேவி 
நீ 
தரையில் 
அல்லவா 
நிற்கிறாய் !?
கோவில் 
குளத்தில் 
கல்லெறிந்து
அலைகளை  
ரசிக்கிறாய் ...

என்
இதயக்
குளத்தில்
பார்வையை
எறிகிறாய்...

இதயதில் எழும் 
காதல்
அலைகளை
என்ன
செய்வது
நான்?
கோவில் 
வாசலில் 
கழற்றிய 
காலணியை 
அணிந்து 
நடக்கிறாய் ..

திரும்பி 
கொஞ்சம் 
பார் ...

என் 
காதலும் 
அங்கே 
அனாதையாய் 
கிடப்பதை !

No comments:

Post a Comment