பூக்களை
படைத்து
விட்டேன்...
படைத்து
விட்டேன்...
பூந்தோட்டத்தில்
சற்று
உலாவிவிட்டு வா!
உன்
சுவாசம்
தீண்டிய பிறகுதான்...
வாசம்
பிறக்கிறது
பூக்களுக்கு!
==================
உன்
பார்வையில்
பிறக்கும்
மேகங்கள்...
உன்
புன்னகையை
சந்திக்கும்
கணத்தில்...
மழையாகி
பூமியெங்கும்
பொழிகின்றன!
==================
ஆயிரம்
கதைகள்
சொல்லட்டும்
இரவுகள்...
உனக்காக
ஒரு
நிலவை...
இரவின்
விளக்காக
எப்போதும்
சூடியிருக்கிறேன்
நான்!
==================
வசந்தங்களை
நீ
உருவாக்குவதில்லை...
உன்னைத்
தீண்டும்
ஒவ்வொரு
பருவமும்...
வசந்தமாகி
விடுகிறது!
==================
வசந்த காலம்
எப்போது
என்கிறாய் ..
வசந்தமே
ஒரு
வசந்ததிற்காக
காத்திருக்கிறதோ !
==================
No comments:
Post a Comment