பருவக்காற்று
வீசுது
பல கதைகள்
பேசுது.
நீரின்றி
ரெண்டு
கெண்டை மீன்கள்
எப்படி
துள்ளும் ?
துள்ளும் ?
தங்கச்சிலை
ஒளிரும் ..
அதன்
நிழல்
எப்படி
ஒளி வீசும் ?
இதழ்கள்
கவி பாடும் ...
கண்கள்
எப்படி
கவி பாடும் ?
உருவமில்லா
ஒருவன்
எப்படி
கண்ணை
படைத்தான் ?
கண்ணுக்குள்
உலகை
எப்படி
காண வைத்தான் ?
உன்னை
கண்டதும் ..
ஆசை முன்
சென்றதா ?
மனம் முன்
சென்றதா ?
எப்படி
கண்டறிவது ?
இதழ் மது
போதை
தரும் ...
கொலுசொலி
எப்படி
போதை
தரும் ?
வானில்
உதிக்கும்
விண்மீன்களை
எண்ணி விடலாம் ...
மனதில்
உதிக்கும்
உனது
எண்ணங்களை
எப்படி
எண்ணுவது ?
இரண்டே
நிறங்கள்தான்
உன்
விழிகளுக்கு...
என்
மனவானில்
வானவில்லை
எப்படி
பூக்க
வைக்கிறதோ!
உனது
விழிப்
போதையிலேயே
மயங்கி
கிடக்கிறது
என்
இதயம்...
உன்
கனவுகளை
அது
எப்படி
தாங்குமோ!
No comments:
Post a Comment