Sunday, July 5, 2026

தள்ளாடும் இயற்கை

வியர்க்கிறதென  
மரத்தடியில் 
ஒதுங்கி விட்டாய் ...

வியர்க்கிறது பார் ..

பாவம்
மரத்திற்கு !!
நீராட
ஆற்றில்
இறங்கினாய்...

உன்னைத் தழுவிய
தண்ணீரெல்லாம்
நீராடியது
உன் அழகில்தான்!
ஆற்றில் 
மூழ்கி 
கரை ஏறி விட்டாய்  ..

உன் அழகிலேயே 
இன்னமும் 
மூழ்கி கிடக்கிறது 
ஆறு !
காற்றுதான் ..

தென்றலாகி விட்டது ..

உன் 
இதயம் 
நுழைந்து வருவதால் !
நெருப்பு மூட்டி 
குளிர் காய்கிறாய் ..

உன் 
அழகில் 
குளிர் காய்கிறது 
அனல் !
கடற்கரையில்
நடக்கிறாய் ...

அலைகள்
கரையைத்
தேடவில்லை...

உன்
காலடிகளைத்தான்
தேடுகின்றன !
ஈரமாகத்தானே 
இருக்க வேண்டும் ?

உன்  கூந்தலை 
உலர்த்திய 
காற்று !

ஏன் 
தகிக்கிறது ?
நீ 
பயணப்படும் 
மலைகளெல்லாம் ...

மலைகளின் 
ராணியாகி 
விடுகிறது !
பனித்துளியை 
தொட்டாய் ...

உன் 
விரல்களின் 
குளிர்ச்சியில் 
நடுங்குகிறது 
பனித்துளி !

No comments:

Post a Comment