மாதவியை தேடும் கோவலனல்ல ..
மறந்து போகும் நளனுமல்ல ...
தீக்குளிக்க சொல்ல ராமனுமல்ல ...
கோபியர் கொஞ்சும் கண்ணனுமல்ல ...
இதயம் தேடும் காதலன் !
விண்ணும் முரசு கொட்டும்
வானவில்லும் தோரணம் கட்டும்
மண்ணும் வாசம் பெறும்
சிறுபுல்லும் தாகம் அறும்
மின்னல் ஒளியை தூவும்
பனிநீர் துளியே வாராய் !
No comments:
Post a Comment