மௌனமும் மொழிதான்
எனில் ...
எவ்வளவு நாள்தான்
மௌன மொழியில் பேசுவாய் !
சுடு சொல்லாக இருந்தாலும்
ஒரு சொல் சொல்லிவிடு !
உயிரோடு விளையாடும்
வேதனையான விளையாட்டை
எங்கே கற்றாய் !
ரோஜாவாக பூக்கவில்லை
என் மனதில்
வாடா மல்லியாய்
பூத்து விட்டாய் !
தண்ணீராய்
தென்பட வேண்டாம் ...
கானல் நீராய் கூட
அவள் தென்படவில்லை !
உன்மீது
அளவிற்கு'அதிகமாக அன்பு
சேர்த்திருக்கிறேன் ...
வேண்டுமென்றால்
சோதனையிட்டு பார்
உன் இதயத்தை அனுப்பி !
பெப்ரவரி 14ல்
என்னை நேசிப்பதாய் பொய்
சொல்ல வேண்டாம் ...
ஏப்ரல் 1ல்
என்னை வெறுப்பதாய்
சொல்லிவிடு ...
பொய் என்று நம்பி
வாழ்ந்து விட்டு போகிறேன் !
என்னை போலவே
சூரியனும் காத்திருக்கிறான்
விடியலுக்காக !
No comments:
Post a Comment