Wednesday, April 7, 2021

பிரம்மன் செய்த ப்ரோட்டோடைப்

 எனக்கு பிறகுதான் 

குருவி பிறந்ததா !

நான் பிறக்கும் வரை 

மயில் நடனம் ஆடவில்லையா !

நான் பிறக்கும் முன் ரோஜா 

பூக்கவில்லையா !

தென்றல் வீசவில்லையா !

நிலாதான் வானில் தவழவில்லையா !

முறைத்தாள் அவள் ...


எல்லாம் 

உன்னை படைக்கும் முன் 

பிரம்மன் செய்த ப்ரோட்டோடைப் 

என்று அவளுக்கு  

எப்படி புரிய வைப்பேன் !

No comments:

Post a Comment