Saturday, April 10, 2021

சொல்லுங்களேன்

 


பிரபஞ்சத்திற்கு 

எல்லையில்லை என்கிறீர்கள் 

தாயின் அன்பிற்கு 

ஏது எல்லை என்றும் 

கொஞ்சம் 

சொல்லுங்களேன் !!


தென்னங்கீற்றும் 

தென்றல்'காற்றும் 

சொல்லாத காதலையா 

நீங்கள் 

சொல்லிவிட போகிறீர்கள் !



======

நீ வரும் நாள்'திருநாளல்ல ..

நீ வரும் நாளெல்லாம் திருநாள் !!


பார்க்க மறுத்தால் 

கண்மணியாய் வருவேன் ...

நினைக்க மறந்தால் 

கனவாய் வருவேன் ...

கூட்டி செல்ல மறந்தால்  

நிழலாய் வருவேன் 

தோள் சாய மறுத்தால் 

தென்றலாய் வருவேன் 

உன்னை சுற்றி யாவும் நானே 

எப்படி மறுப்பாய் !!






No comments:

Post a Comment