இதயத்தை
காற்று உரசும்போதெல்லாம்
உன் நினைவும்
உரசுகிறது !!
எத்தனை கவிதைகள்
காகித வரியில் ...
அத்தனையும்
டெபாசிட் இழந்தது
உன் ஒரே ஒரு
இதழ் வரியில்!
முனிவர்கள்
பாக்கியம் செய்தவர்கள் ...
முக்தி பெற்றார்கள் ..
நீ பிறக்கும் முன்னே
பிறந்ததினால் !!
நச்சரிக்குது உன் பேரை
நினைவுகள் இன்று !
எச்சரிக்குது இதயம் அதனை
காதல் என்று !
எப்பொழுதும் கனவில்
கொஞ்சிடும் கிளியே
சில பொழுதுகள்
நிஜத்தில் தருவாயா ...
நிஜமென கொஞ்சம்
கொஞ்சிட வருவாயா !!
No comments:
Post a Comment