Friday, April 2, 2021

புதிய கீதை

மதங்களின் சடங்கு அறிவீர்  
மனிதத்தின் குரல்   கேட்பீரோ !
மனிதத்தை  அடகு வைத்து 
சமத்துவத்தை கொள்ள இயலுமோ !
இரத்தத்தில் குளிக்கும் மதம் 
அன்பில் என்று குளித்திடுமோ !
தேசம் கடந்த நேசத்தை 
மோசமின்றி உரைப்பீரோ!
நோய்த்தொற்றின் வேகத்தில் 
நேசமும் இங்கு பரவிடாதோ!
இறைவனுக்காக போராடுவோரே 
சத்தியமே இறைவன் என்று அறிவீரோ!

No comments:

Post a Comment