Sunday, April 4, 2021

முருகா

[தேவதை இளம் தேவி என்னை சுற்றும் ஆவி]
பழனி மலை வேலா பார்வதி குமாரா 
பரமசிவன் மைந்தா ஞாலம் காக்க வா 
ஓம் என்று சொல்லி அழைத்தேன் 

ஆடிமாச புயல் காற்றில் 
ஐப்பசியின் அடை மழையில் 
மொத்த பயிருமே  கொத்தாய் அழுகுதே 
நீர் மறந்த நதிகளெல்லாம் 
மணல் மேடு ஆனதிங்கே 
மணற்கொள்ளையே தாங்கவில்லையே
காற்றும் காசுக்கே குடிநீரும் காசுக்கே 
அபயம் வேண்டி உன்னை தேட 
தரிசனமும் இங்கு காசுக்கே (பழனி)
 
பெட்ரோலென்ன டீசலென்ன 
ஃப்ரிட்ஜென்ன ஏசியென்ன 
புவியின் வெப்பமே எமனாய் ஆனதே
பிளாஸ்டிக்கும் கலப்படமும் 
கெமிக்கலான சாப்பாடும் 
பாசக்கயிற்றையே மெல்ல வீசுதே
சிலைகள் கடத்தியே சிலரின் வாழ்க்கையே 
உலகம் காக்க உன்னை தேட 
உந்தன் சிலையும் போலியே (பழனி)

பணம் காச கண்டுபுட்டா 
நேர்மையென்ன நியாயமென்ன
நீதிகளும்தான் வேஷம் போடுதே 
வீட்டிலுள்ள சொந்தங்களும் 
நாட்டிலுள்ள நட்புகளும் 
செல் போனிலே போலி நேசம் காட்டுதே
அன்பும் போஸ்டிலே ஆதரவும் ஷேரிலே 
தர்மம் வேண்டி உன்னை தேட 
எந்தன் பாட்டும் டிஜிட்டலே (பழனி)

No comments:

Post a Comment