குறுக்க நெடுக்க
நடந்து என்னை
கிறங்க வச்சு
தொலைச்சவளே ..
மண் பாத்து
நடந்து எனக்கு
மண்ணில்
குழி பறிச்சவளே ...
பாத்ததெல்லாம்
பாத்துபுட்டு
பாக்கு வெட்டியா
வெட்டியவளே ...
செஞ்சதெல்லாம்
செஞ்சுபுட்டு
மிஞ்சிக்கிட்டு
போனவளே ...
கிறுக்கி
உன் நெனப்புனால
கிறுக்கா
நானும் திரியுறேனே ...
பக்கம் நீயும்
இல்லாம
பரிதவிச்சு
உருகுறேனே ...
பாசாங்கு
செய்யுறேன்னு
பாவி மனச
தேத்துறேண்டி ...
நடந்ததெல்லாம்
நெனச்சு நானும்
கனவிலயே
கருகிறேண்டி ...
பாசம் வச்ச
பய எனக்கு
மோசம் செஞ்ச
கொடும ஏண்டி
வெவரம் கெட்ட
பய எனக்கு
வெவரமாத்தான்
சொல்லேண்டி ..
பாடையிலே
போகுமின்னே
வெரசாத்தான்
சொல்லிப்புடு ...
பசல நோயில
போயிடுவேன்
கொள்ளி நீயும்
வச்சுப்புடு !!
No comments:
Post a Comment