கதிரவன் துயிலெழும் காலை
பனிப்பூக்கள் முத்தமிடும் சோலை
அதை பார்க்காமல்
எனக்கென்ன வேலை !
வண்டுக்கு பூ விடும் தூது
பொன்வண்டு தேனுண்ணும் போது
அதை பார்க்காமல்
சுகமிங்கு ஏது !
ஆம்பல் பூப்பூக்கும் ஏரி
வாவென்று அழைக்கும் வரவேற்பு கூறி
அதை பார்க்காமல்
போவேனோ தேரில் ஏறி !
இயற்கை காட்டும் வண்ண ஜாலம்
மனதிற்கு அழகூட்டும் கோலம்
அதை என்றும் எழுதாமல்
எனை வென்றிடுமோ காலம் !
No comments:
Post a Comment