Friday, April 2, 2021

எனை வென்றிடுமோ காலம் !

 கதிரவன் துயிலெழும் காலை 

பனிப்பூக்கள் முத்தமிடும் சோலை 

அதை பார்க்காமல் 

எனக்கென்ன வேலை !


வண்டுக்கு பூ விடும் தூது 

பொன்வண்டு தேனுண்ணும் போது 

அதை பார்க்காமல் 

சுகமிங்கு ஏது !


ஆம்பல் பூப்பூக்கும் ஏரி 

வாவென்று அழைக்கும் வரவேற்பு கூறி 

அதை பார்க்காமல் 

போவேனோ தேரில் ஏறி !


இயற்கை காட்டும் வண்ண ஜாலம் 

மனதிற்கு அழகூட்டும் கோலம்  

அதை என்றும் எழுதாமல் 

எனை வென்றிடுமோ காலம் !

No comments:

Post a Comment