Thursday, April 8, 2021

அவள் காதலை சொன்னாள்

பூக்களும் என்னோடு நடக்கிறதே 
வானவில் கைகோர்த்து சிரிக்கிறதே 
வெண்ணிலா தோள்களை தழுவிடுதே 
பட்டாம்பூச்சியாய் இதயமும் பறக்கிறதே 

விழிகளில் ஜீவன் துடித்திடும் 
இமைகளும் சாமரம் வீசிடும் 
இரவுகள் அனலை வீசிடும் 
கனவுகள் பனியை பொழிந்திடும் 
மோகத்தில் என்னை கோர்க்கவா ...
மோனத்தில் என்னை சேர்க்கவா  
மேகமே தாகம் தீர்க்கவா (பூக்களும்)

நெஞ்சணை பஞ்சணை ஆகிடுமா 
வஞ்சனையின்றி சுகம் தருமா 
முத்தத்தில் சத்தமும் கேட்டிடுமா 
ரத்தத்தின் நாளமும் உடைந்திடுமா 
உன்னிடம் என்னை பூட்டவா 
உயிரினில் ராகம் மீட்டவா 
காதலின் உச்சத்தை காட்டவா (பூக்களும்)

No comments:

Post a Comment