Friday, April 23, 2021

பாடாமல் வேறென்ன எனக்கு வேலை !

விழியோர கவிதைகள் 

விழிகளும் கார்த்திகை அகல்களோ - விண்ணில் மின்னும்  அகல்களோ !

பார்த்தன் கையேந்தும் நாணும் - அவள் புருவம் கண்டு நாணும் !

காமன் மலர்கணைகள் அஞ்சும் - அவள் விழி அசைவிற்கு அஞ்சும்  !

அவள் பார்வையில் பூக்குது ஊதாப்பூ வண்டு வந்து தினம் ஊதா பூ !

நெஞ்சில் பூக்க வைத்தாள் காதல் பூவை கண்களில் பூ விரித்த அந்த பூவை !

வந்தது மயிலொன்று எனை நாடி அதன் கண்களில் துடிக்குது எந்தன் நாடி !

விழியிரண்டும் வீசுது கூர் வேலை கவிதையில் வடிப்பதே என் வேலை !

No comments:

Post a Comment