வண்ணத்து பூச்சியின்
வண்ணங்கள் குலையுது ...
தண்ணீர்ப்பாம்பு
தவளையை தேடுது ...
நீரில் நாற்று
மிதக்குது ...
கண்ணீரில் உழவன்
கண்ணும் மிதக்குது ...
கூரையில் சொட்டுது
நீர்த்திவலை
சேர்த்து வைக்குது
ஏழையின் வீட்டு
தவலை
குயவன் வலைந்த
மண்பானை
நீந்துது சிறு
தலைப்பிரட்டை ..
தொடங்கியது மழைக்காலம் !!
No comments:
Post a Comment