Saturday, April 10, 2021

சீண்டுகிறான் காமன் ...

 காதல் மழை பொழிகையில் 

நாணக்குடை எதற்கோ !


காதல் வழி சாலையில் 

வேகத்தடை எதற்கோ !


நீ பாராமுகமாய் இருந்தாலும் 

உன் வளையோசை அழைக்கிறதே !


நீ அணிந்த பின்பு 

அழகு போட்டி நடக்கிறது 

உன் கூந்தல் பூக்களுக்கும்  

தாவணி பூக்களுக்கும்! 


உன் பேரை சொல்லி 

அவ்வப்போது வந்து 

சீண்டுகிறான் காமன் ...

சேர்ந்து போர் தொடுக்கலாமா 

அவனிடம் !!


உன்னை காதலிக்கிறேன் 

என்கிறார்கள் ..

எனக்கல்லவா தெரியும் 

நான் காதலை காதலிக்கிறேன் 

என்று !!

No comments:

Post a Comment