Friday, April 16, 2021

என்றும் நீ என் எல்லையே !

 முகம் காட்டு என் முல்லையே !

கனவில் நீ தரும் தொல்லையே !

உனைப்போல் துணை இல்லையே !

என்றும் நீ என் எல்லையே !


உந்தன் நரம்பில் ஓடுது 

எந்தன் உதிரமே !

கொஞ்சு மொழி சொல்லாதோ 

உந்தன் அதரமே !

உந்தன் கொஞ்சு மொழியே 

டீக்கு மதுரமே !


பூவில் சின்ன பூவில் 

ஒரு பூ பூத்ததோ 

தோளில் எந்தன் தோளில்

அது பண் பாடுதோ !


பழங்கஞ்சி குடிச்சாலும் 

வெங்காயம் கடிச்சாலும் 

தீராத பசியெல்லாம் 

உன் மடியில் தீருமடி !

No comments:

Post a Comment