Tuesday, April 13, 2021

சித்திரை


பச்சை சேலை கட்டி 
கண்ணில் வண்ணம் தீட்டி 
காதல் எண்ணம் கூட்டி
சித்திரை மகளே வா 
புன்னகை பூவாய் வா

மனதின் காயங்கள் ஆற்றிட 
மனிதம் ஏற்றம் பெற்றிட 
புவியின் வளங்கள் காத்திட 
சித்திரை மகளே வா 
இனிய வேனலாய் வா 

வேதனை சாதனை ஆகிட
ஓங்கிய சிந்தனை ஊறிட 
துன்பத்தை நிந்தனை செய்திட 
சித்திரை மகளே வா 
சீரிய துணையாய் வா 

ஏழ்மையை சருகாய் எரிக்க
தீமையை  காலால் உதைக்க 
கயமைகள் கலங்கி ஓட 
சித்திரை மகளே வா 
சுழலும் புயலாய் வா 


No comments:

Post a Comment