பச்சை சேலை கட்டி
கண்ணில் வண்ணம் தீட்டி
காதல் எண்ணம் கூட்டி
சித்திரை மகளே வா
புன்னகை பூவாய் வா
மனதின் காயங்கள் ஆற்றிட
மனிதம் ஏற்றம் பெற்றிட
புவியின் வளங்கள் காத்திட
சித்திரை மகளே வா
இனிய வேனலாய் வா
வேதனை சாதனை ஆகிட
ஓங்கிய சிந்தனை ஊறிட
துன்பத்தை நிந்தனை செய்திட
சித்திரை மகளே வா
சீரிய துணையாய் வா
ஏழ்மையை சருகாய் எரிக்க
தீமையை காலால் உதைக்க
கயமைகள் கலங்கி ஓட
சித்திரை மகளே வா
சுழலும் புயலாய் வா
No comments:
Post a Comment